பெரம்பலூர்: ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-10 10:42 GMT

பெரம்பலூர் அருகே கொள்ளை நடந்த வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம். அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இவரது  வீட்டில் உள்ள அனைவரும் கிரில் கேட்டை பூட்டி விட்டு தூங்கியுள்ளனர். கிரில் கேட் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் தூங்கிய நபர்களின் அறையை பூட்டி பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், ஆரம். ஜிமிக்கி, மோதிரம், செயின் உள்ளிட்ட 223/4 பவுன் தங்க நகையையும், 2 லட்சத்து 62 ஆயிரம் பணம்,மற்றும் 1 ஜோடி வெள்ளி கொலுசையும் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News