பெரம்பலூர் மாவட்டத்தில் தொடரும் மழை: வீடுகள் சேதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள் சேதமடைந்துள்ளன.

Update: 2021-11-05 09:00 GMT

மேலப்புலியூர் கிராமத்தில், தொடர் மழையால் 5 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. 

பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராமத்தில், நேற்றிரவு பெய்த மழையால், 5-க்கும் மேற்பட்ட வீட்டின் சுவர்கள் மற்றும் மேற் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில்,  வருவாய்த்துறை அதிகாரிகள், இன்று நேரில் சென்று  வீட்டின் சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை, கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். மேலும்,  மாவட்டத்தின் வேறு இடங்களில் இதே போன்று வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நீர்நிலைகள் அருகில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும்,  பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News