அடிப்படை வசதி கோரி வெங்கலம் கிராம மக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகள் இல்லை என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்.

Update: 2021-07-19 17:15 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டு மனை பட்டா , மின்சார வசதி மற்றும் குடி தண்ணீர் வசதி கேட்டு வெங்கலம் பொதுமக்கள் மனு .

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் காட்டுக் கொட்டகை தெற்கு மலை அடிவாரம் பகுதியில் 40 ஆண்டுகள் மேலாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு மற்றும் குடிதண்ணீர் இணைப்பு வழங்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்க மட்டும் வருகிறார்கள் எனவும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News