ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்-காவலர்கள்

ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பணியில் இருந்த காவலர்கள் நகராட்சி பணியாளர்ககளுக்கு கேக் வழங்கி வாழ்த்தினர்

Update: 2022-01-01 04:15 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நள்ளிரவு 12.01 மணிக்கு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். 

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு  ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இதில்,பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நள்ளிரவு 12.01 மணிக்கு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பெரம்பலூர் நகரில் உள்ள பல்வேறு நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் ஸ்டாண்ட், போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முக்கிய சந்திப்புகள், சாலைகளில் போலீசார் நள்ளிரவில் வாகன தணிக்கை மேற்கொண்டு விதிமுறை மீறியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. மேலும், பணியில் இருந்த காவலர்கள் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக நகராட்சி பணியாளர்ககளுகு கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News