ஒப்பந்த ஊழியர்களின் தினக்கூலியை உயர்த்த தமிழக முதல்வருக்கு மனு

மின் வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்கிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

Update: 2021-07-24 15:00 GMT

மின் வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி 380 ரூபாய் வழங்கிட மின்வாரிய தலைவர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் கூட்டம்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் கோரிக்கை மனு அனுப்பும் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டலச் செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற, சிறப்பு கூட்டத்தில் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்கிட வேணடும் என கேட்டு மின் வாரிய தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது தொழில் சம்பந்தமான சுயவிவரத்தை பதிவு செய்து கோரிக்கை அடங்கிய மனுவினை தபால் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் கோட்ட செயலாளர் நாராயணன், கோட்டஇணைச் செயலாளர் நல்லசாமி, அரவன் தர்மராஜ், கருப்பையா, மலரவன், அபிமன்னன் பிரவின் குமார், கிருஷ்ணன் ஆகிய ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News