பெரம்பலூரில் இன்று 607 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் இன்று 607 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 107 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். பெரம்பலூரில் இன்று மொத்தமாக 607 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,45,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.