பெரம்பலூரில் நிலம் நனைத்த மழை!

பெரம்பலூரில் பரவலான இடங்களில் சாரல் மழை பெய்தது.

Update: 2021-05-07 13:00 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக தோன்றிய அக்னி நட்சத்திரம் மேலும் வெயின் தாக்கத்தை அதிகரித்தது.

வேதனை தெரிவித்து வந்த மக்கள் கோடை மழைக்காக காத்திருந்த நிலையில் இன்று மகிழ்ச்சி அளிக்குக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளதால் வெயின் தாக்கம் குறைக்கும் விதமாக மழை பெய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகளும் கிராமபுற மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இம்மழை மற்ற பகுதிகளில் பெய்யாமல் ஏமாற்றம் அளித்து சென்று விட்டதாகவும் பெரம்பலூர் நகர் பகுதிகளில் நிலம் நனைத்த மழையாக சென்று விட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News