பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

பெரம்பலூரில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-11 07:00 GMT

பெரம்பலூரில் பெட்ரோல், டீசல், விலைஉயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து தமிழகம் முழுதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையிலுள்ள பாரத் பெட்ரோல் பங்க் முன்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலையில் நுங்கு சக்கர வண்டி ஓட்டி நூதன முறையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இந்த ஆர்பாட்டத்தில் ஊரடங்கால் வருவாயின்றி தவித்து வரும் பொது மக்களை மேலும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த செயலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News