பெரம்பலூர்: குடும்பத் தகராறில் கைக்குழந்தைக்கு தீவைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி 6 மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-27 10:00 GMT

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மனைவி பிரியங்கா. இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி 6 மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ஆறு மாத கைக்குழந்தை மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தாய் பிரியங்காவிற்கு கழுத்து, முகம் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை திரிஷாவிற்கு முதுகில்  தீக்காயம் ஏற்பட்டது. 6 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News