பெரம்பலூர் மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, வழங்கிய தொண்டு நிறுவனம்
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.
பெங்களூரில் இயங்கிவரும் வெப்கோ இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மருத்துவமனை சார்பாக கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா பெற்றுக் கொண்டார்.