பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்
அரசு மருத்துவமனைக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம்.வழங்கியது.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை பூமிகா அறக்கட்டளை சார்பில் ரூ.10.50 லட்சம் மதிப்பிலான (10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 கருவிகள், 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கருவிகள்) 13 இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினர்.
இதனை மருத்துவமனை இணை இயக்குனர் கோ.திருமால், மருத்துவமனை மருத்துவ அலுவலர் என்.ராஜா மற்றும் பொறுப்பாளார் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.