பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம்.வழங்கியது.

Update: 2021-05-20 06:00 GMT

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை பூமிகா அறக்கட்டளை சார்பில் ரூ.10.50 லட்சம் மதிப்பிலான (10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 கருவிகள், 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கருவிகள்) 13 இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினர்.

இதனை மருத்துவமனை இணை இயக்குனர் கோ.திருமால், மருத்துவமனை மருத்துவ அலுவலர் என்.ராஜா மற்றும் பொறுப்பாளார் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News