பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-28 07:00 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஆய்வை மேற்கொண்டு வரும் அமைச்சர் S.S.சிவசங்கர் இன்று மதியம் 2 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிசாபார்த்திபன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

இதனைத் தொடர்ந்து  பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் மருத்துவமனையின் தேவைகளையும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைககளை மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்பு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் ஆக்சிஜன் கருவிகளை பார்வையிட்டார் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முதல்வரின் வழிகாட்டுதலோடு தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பெரம்பலூரில் கொரோனா தடுப்புக்கான பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News