பெரம்பலூரில் இன்று 118 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-06-07 14:30 GMT

பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 44 பேருக்கும், வேப்பந்தட்டையில் 23 பேருக்கும், வேப்பூரில் 32 பேருக்கும், ஆலத்தூரில் 19 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

 இதுவரை பெரம்பலூரில் 9,764 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,926  குணமடைந்துள்ளனர், மேலும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்  இன்று வரை மருத்துவ சிகிச்சையில் 1,725 பேர் உள்ளனர்.

Tags:    

Similar News