பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15.12.21 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-09 12:30 GMT

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15.12.2021 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021 என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News