பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவை

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவையை போலீஸ் துணை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார்.

Update: 2021-06-02 13:45 GMT

பெரம்பலூரில் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல கட்டணமில்லா ஆட்டோ சேவை வாகனம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் ஆட்டோக்களை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News