டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் பா.ஜ.கவினர் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-13 08:15 GMT

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.வினர்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் அரசு மதுகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சார்பில் அனைத்து பகுதிகளிலும் எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூரில் இன்று பாஜக மாவட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் பதாகைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News