பெரம்பலூர்: வெறும் ரூ.200க்கு விலைபோகும் வாழைத்தார்- விவசாயி வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாழைத்தார் வெறும் ரூ.200க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-06-03 05:15 GMT

ஊரடங்கால் குறைந்த விலைக்கு விற்பனையாகும் வாழைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பகுதியில் வாழை பயிர் செய்துள்ள விவசாயி கோபால் ரூ.5 லட்சம் செலவு செய்து வாழை பயிரிட்டுள்ள நிலையில் தற்போது நன்கு விளைந்த வாழைகள் தார்விட்டு பழுத்து வீணாகுவதாக வேதனை தெரிவிக்கின்றார்.

கடந்த ஆண்டு வாழையால் கிடைத்த லாபத்தால் இந்தாண்டு பயிரிட்ட நிலையில் ஊரடங்கால் கொள்முதல் செய்ய முடியாமல் அவ்வழியே வருவோரிடம் ரூ.500 வாழைத்தாரை ரூ.200க்கு விற்பனை செய்யும் அவலம் ஏற்படுட்டுள்ளது.

வாழை ஆண்டு பயிராகும். இதில் வருவாய் ஈட்டலாம் என்று எதிர்பார்த்த விவசாயி கையில் வைத்திருந்த பணம் அனைத்தையும் வாழையில் போட்டு விட்டதாகவும், தான் இதுவரை விவசாயத்தில் சந்தித்திராத இழப்பை இந்தாண்டு சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும், இயற்கை பேரிடரால் இழப்பு ஏற்பட்டால் கூட தாங்கிக் கொள்ளளாம். ஆனால் நன்கு விளைந்து அதை விற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக கூறுகிறார்.தற்போது மாற்று பயிர் செய்ய கடனாளி ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதை போக்கும் விதமாக அரசு நல்ல விளைக்கு தார்களை தோட்டக்களை மூலம் எடுத்துக்கொண்டால் செலவு செய்த தொகையாவது கிடைக்கும் தான் கடன் வாங்காமல் விவசாயம் செய்ய வழி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags:    

Similar News