பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்து உள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 04.10.2021 திங்கட் கிழமை முதல் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா கூறுகையில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 04.10.2021 முதல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம், மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்றார்.