பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழைகாரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மானாவாரி பயிர்களை அதிக அளவு கொண்ட இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை அளவுக்கதிகமான மழை பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து குறிப்பாக மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முறையான கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக குன்னம்தொகுதி செயலாளர் இரா.ஜோக்கியம் மற்றும் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், பெரம்பலூர் தொகுதி தலைவர் முருகேசன் மற்றும் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.