திருக்குறள்,புறநானூறை மனப்பாடமாக கூறிய 3 வயது சிறுவனை பாராட்டிய அமைச்சர்
பெரம்பலூரில் திருக்குறள், புறநானூறு ஆகியவற்றை மனப்பாடமாக கூறிய 3 வயது சிறுவனை அமைச்சர் சிவசங்கர் பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா-நடராஜன் தம்பதிகளின் இரண்டாவது மகன் மகிழன் எனும் 3 வயது சிறுவன்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, புறநானூறு, திருக்குறள் ஆகியவற்றை மனப்பாடமாக கூறி வருகிறார். அந்த சிறுவனை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பாராட்டி, "VRIKSHA BOOK OF WORLD RECORDS'' எனும் சான்றிதழை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீவெங்கட்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குன்னம் சி.இராஜேந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.