பெரம்பலூர் அருகே சிறுமியின் கன்னத்தில் முத்தம் கொடுத்த வாலிபர், கைது செய்த போலீஸ்

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-11 12:49 GMT
பைல் படம்

பெரம்பலூர் மாவட்டம் ,குன்னம், சடைக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, அல்லிநகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார் .

 சிறுமியின் தந்தை ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி அவரது 2 மகள்கள் அருகில் உள்ள அவரது மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார் பின்னர் மதியம் சுமார் 4.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது தனது இளையமகள் வீட்டில் அழுது கொண்டிருந்துள்ளார்.

விசாரித்தபோது தனது வீட்டின் அருகில் வசிக்கும் செல்வராஜ் 42 ( குறவர் ) என்பவர் தனது வீட்டின் திண்ணையில் படித்துக்கொண்டிருந்த சிறுமிடம் பேச்சு கொடுத்து திடீரென கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததாகவும் , சிறுமி சத்தம் பேட்டதால் அருகில் இருந்த உறவினர்கள் ஓடிவந்து பார்த்தபோது செல்வராஜ் அங்கிருந்து ஓடியுள்ளார்.

சிறுமியின் தந்தை சம்பவம் தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , வழக்கு பதிவு செய்தும் செல்வராஜை போக்சோ சட்டத்தின் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News