பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவர் கைது

பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-16 14:24 GMT

பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவருடன் போலீசார் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி  உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம்  மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில்   காரியானூர் வெள்ளுவாடி போன்ற இடங்களில் சிறப்பு ரோந்து அலுவல் புரிந்தும் காரியானூர் கிராமம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த பெரியசாமி என்பவரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர்,கைது செய்தும் அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 2 லிட்டர் மதிப்பிலான 20 பாக்கெட் நாட்டு சாராயத்தை கைப்பற்றி அதே இடத்தில் அழித்தும் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News