முத்தங்களால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்த கல்லூரி மாணவர்

பெரம்பலூர் கல்லூரி மாணவர் மூன்றாயிரம் முத்தங்களால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்து சாதனை முயற்சி செய்துள்ளார்

Update: 2021-07-12 14:15 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரனின் மகன் நரசிம்மன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நரசிம்மனுக்கு இளம் வயதிலேயே ஒவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் தஞ்சை பெரிய கோவில், மற்றும் அப்துல் கலாம் உள்ளிட்டவைகளை மூக்கால் ஒவியமாக வரைந்துள்ளார்.

இதனிடையே தற்போது பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவர் நரசிம்மன் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தை பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால் 3000 முத்தங்களால் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளர். 16 அடி நீளமும், எட்டரை அடி அகலம் கொண்ட துணியில் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளார். தற்போது இந்த ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் - சாதனை முயற்சி அனுப்பபட்டு உள்ளது. மேலும் கின்னஸ் ரெக்கார்டு முயற்சிக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News