அன்னமங்கலத்தில் திமுகவினர் கபசுர குடிநீர் வழங்கல்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் தீவிர பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களிடம் கபசுர குடிநீர் வழங்க அனுமதி கோரிய வழக்கில் திமுக மக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திமு கழகத்தினர் அவரவர் பகுதிகளில் மக்களுக்கு இலவச கபசுர குடிநீரை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் உள்ள திமுகவினர் சார்பில் வேப்பந்தட்டை ஒன்றியம் மற்றும் அதனை சுற்றியுள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமையேற்று கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.