பெரம்பலூர் மாவட்டத்தில் 18-ம் தேதி சுதந்திர அமைப்பு ஓட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ம் தேதிசுதந்திர அமைப்பு ஓட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.

Update: 2021-09-15 17:14 GMT

பைல் படம்

இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் நமது  நாட்டில் உள்ள 744 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகம் (மத்திய அரசு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனம் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருடன் இணைந்து  நடத்தப்பட்டு வருகிறது. இந் த ஓட்டமானது  பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற பதினெட்டாம் தேதி காலை  ஏழு முப்பது மணிக்கு நடத்தப்பட உள்ளது.

சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இதில் பங்கேற்குமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் சுதந்திர தின ஓட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு 18.09.2021 அன்று காலை 7.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்து, நடைபெற உள்ள இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் பங்கேற்று உடல்தகுதியினை மேம்படுத்திடவேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.



Tags:    

Similar News