பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்
பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அறிவிப்பின் படி, கொரோனா தடுப்பு பணியை பெரம்பலூர் நகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுத்தும் விதமாகவும் அதிகாரிகள் தடுப்பு பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக மருத்துவ குழுவை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது..
தடுப்பூசி வழங்கப்படுவதோடு நகராட்சி சார்பில் பாதிப்பு உறுதியான பகுதிகளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு பொதுமகள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் முககவசம் அணியும் படியும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.