பெரம்பலூரில் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தையையை வைத்து வீசிய கொடூரம்

பிறந்து சில மணி நேமே ஆன குழந்தையை கட்டைப்பையில் வைத்து குப்பைத் தொட்டியில் வீசி சென்றது யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-08-11 14:06 GMT
பைல் படம்

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் ,செல்வி என்பவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.

கடந்த 08.08.21 தேதி அன்று ஆடி அமாவசையை முன்னிட்டு செல்வியும் அவரது கணவர் சகாதேவனும் கோயிலுக்கு செல்வதற்கா இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது பெரம்பலூர் கோனோரிபாளையம் புறவழிச்சாலையில் மதுபான கிடங்கு அருகில் பிறந்த நிலையில் பெண் குழந்தை கட்டை பையில் வைக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து இருவரும் எடுத்துச் சென்று பராமரித்துள்ளனர் .

இந்நிலையில் , இன்று காலையில் பச்சிளம் பெண் குழந்தையின் கண் நீல நிறத்தில் இருப்பதை பார்த்து பரிசோதணை செய்வதற்காக பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் .

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்று கேட்டுள்ளார் சகாதேவன் ,செல்வியும் நடந்தை எடுத்து சொன்னார்கள்.

உடனே காவல்துறைக்கும் , சைல்டு லைனுக்கும் தகவல் கொடுத்தனர் மற்றும் பெரம்பலூர் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் திவ்யா , கோகிலா ஆகியோர் குழந்தையை மட்டும் பொறுப்பில் எடுத்துச் சென்று பெரம்பலூர் அசு தலைமை மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டம் ஒப்படைத்துள்ளனர்.

இது போன்று குழந்தைகளை கண்டால் உடனே சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News