பெரம்பலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி

பெரம்பலூில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2021-09-24 15:49 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க தலைவர்கள் தமிழகத்தில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கியமைக்கும், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளை அதிகப்படுத்தியமைக்கும் பேருராட்சி , நகராட்சி தரம் உயர்த்தியதற்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு எழுந்து நின்று கை தட்டி நன்றினர்.

அதனுடன் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் வழங்கினர்.அந்த மனுக்களில் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

100 நாள் வேலை திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த குளறுபடிகளை களைந்து அனைவருக்கும் முறையான வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பை தற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெரம்பலூரில் வேளாண் கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  இடம் பெற்று இருந்தது.

Tags:    

Similar News