பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூரில் சுதந்திர ஓட்டத்தைஅமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-18 10:33 GMT
பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த சுதந்திர ஓட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி பாலக்கரை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி. சுருதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, தடகள பயிற்சியாளர் கோகிலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News