முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-05-30 10:00 GMT

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர்கள்  கே.என்.நேரு, பொன் முடி, மகேஷ்பொய்யாமொழி, சிவசங்கர் உள்ளிடோர் அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவால் உயிரிழந்த திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல் அவரது சொந்த ஊரானா ஆலத்தூர் வட்டத்தில் உள்ள வேலூர் கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும்,எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளரான ஆ.இராசா அவர்களின் துனைவியாரின் இழப்பு பேரிழப்பு எனவும் அவரது குடும்பத்தினருக்கு திமுக கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News