பெரம்பலூர் அருகே தீ விபத்து : ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

பெரம்பலூர் அருகே இன்று பிற்பகலில் நடந்த தீ விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2021-06-16 12:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் ஆதி திராவிடர் தெருவில் வசிப்பவர் குமரன் பார்வதி தம்பதியினர்.


இவர்கள் துக்க நிகழ்விற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர்களின் வீடு இன்று மதியம் மர்மமான முறையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்பட்டார்கள். இருந்த போதும் வீடு முற்றிலும் தீக்கிரையானது.


கிராமத்தின் கீழ்புறமாக இருந்த வீட்டில் தீப்பிடித்ததால் தீ மேலும் பரவாமல் அதிர்ஷ்ட வசமாக மற்ற வீடுகள் தப்பின. இதனிடையே செய்தி அறிந்து தீயணைப்புதுறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து தீய௭ற்கு அணைத்தனர்.  மருவத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News