குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கைலி அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கைலி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-29 08:16 GMT

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு  கைலி  அணிந்து வந்த விவசாயி லோகநாதன்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள் என 100 க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்ற விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.2020-2021 ஆண்டில் மக்காச்சோள பயிருக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்திருந்தும் காப்பீடு கிடைக்காததால்  அதனை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்ளும்  கோரிக்கையுடன் அவர் மனு கொடுக்க வந்தார்.

ஆனால் அவர் கைலி அணிந்து வந்ததால் அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை.வேட்டி கட்டி கூட்டத்திற்கு வருமாறு அறிவுறுத்தினர்.இதனால் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வெளியே நின்ற படி கைலி அணிந்து வந்த விவசாயி காத்திருந்தார்.

பின்னர் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கைலி அணிந்து வந்த விவசாயி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News