டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

2021 ஆம் ஆண்டிற்கு சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-07-02 04:07 GMT

2021 ஆம் ஆண்டிற்கு சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிhpயா, தகவல்.

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை இணையதள முகவரியான -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் நேரடியாக என்ற இணையதள முகவரியில் 05.07.2021 - ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற அலுவலகத்தை 044-28364322 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவினை 74017 03516 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News