பிரதமரை பற்றி அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாரத பிரதமரை பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பெரம்பலூர் அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-24 14:15 GMT

பாரத பிரதமரை பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பெரம்பலூர் அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், பாஜக கட்சி குறித்தும் பொது இடத்தில் அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவை பார்த்து பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சியினர் பங்கேற்று கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News