பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செயதனர்.

Update: 2021-10-24 16:51 GMT

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டறிய சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்து சுற்றித்திரிந்த ஆலம்பாடி,வடக்கு மாதேவி ரோடு,புதிய காலனி, அருண்ராஜ் (24) எறையூர் வினோத் (19),நவாஸ்முகமது ஆகியோரை சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக  பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News