பெரம்பலூரில் கள்ள ஓட்டால் பரபரப்பு: வேட்பாளர்கள் வாக்குவாதம்

Update: 2022-02-19 15:08 GMT

தமிழ்நாடு முழுவதும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பெரம்பலூர் நகராட்சிக்கான தேர்தலில், 2 - வது வார்டான முல்லை நகரில் வசிக்கும் அலிமா பிவீ (58) என்பவர் ராமகிருஷ்ணா பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய சென்றார்.

அப்பொழுது அவரது ஓட்டை ஏற்கனவே போட்டதாக தேர்தல் அலுவலர் கூறினர். இதனால் வாக்குவாதம் நடைப்பெற்றது, இதைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் அவருக்கு மாற்று வாக்கு செலுத்துவதற்கான ஒப்புகை சீட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு, அவரை ஓட்டுப்போட அனுமதித்தனர். இதனைத்  தொடர்ந்து அலிமாபிவீ தனது வாக்கினை சேர்த்து விட்டு சென்றார். அலிமா பீவி பெயரில் யாரோ ஒருவர் கள்ள ஓட்டு போட்டது அந்த வாக்குச் சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News