பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.

27ம் தேதி நடைடபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-23 16:44 GMT

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி செப்.27ம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை  விளக்கி சி.ஐ.டி.யு. சார்பில் பெரம்பலூர் 4 ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் .எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகி தியாகராஜன்,சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம் , சண்முகம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News