சாலையில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு

பெரம்பலூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-16 16:15 GMT

மாதிரி படம்

பெரம்பலூர்  குளோபல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா வயது 61 இவர் வழக்கம் போல் இன்று எளம்பலூர் சாலையில் உள்ள கடையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டிருக்கும்போது, இவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சகுந்தலா கழுத்தில் போட்டிருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு ஏதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா எனவும், திருடியது யார்? இரு சக்கர வாகனம் என்ன? என்பது குறித்து விசாரணை செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் இது போன்ற மர்மநபர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி கொண்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News