பெரம்பலூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-08-09 11:07 GMT

பெரம்பலூரில் திருட்டு நடந்த வீடு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்  தனது குடும்பத்துடன் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து. வீட்டில் பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம், தோடு உள்பட 19 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் கை ரேகை நிபுணர்களுடன் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.பெரம்பலூர் நகரப்பகுதில்  தொடர் திருட்டை தொடர்ந்து கிராமங்களும் மர்ம நபர்கள் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News