பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-01-21 07:11 GMT

திருட்டு நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூரை சேர்ந்தவர் ருக்குமணி(35).இவர் ஜனவரி 20 ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு சுமார் 2 பவுன் தங்கச் செயின்ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், அதனை தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்கள் குறித்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து காரியானூர் பகுதியில் கடந்த சில தினங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News