பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்
பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயி தங்கம் தனது வயலில் வாழை சாகுபடி செய்திருந்தார்.நன்கு விளைந்து தார் விட்டிருந்த வாழைமரங்கள் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 60க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்த வாழைகள் தார்விட்டு அடுத்த மாதம் அறுவடை செய்ய காத்திருந்த நிலையில் சூறைக்காற்றில் சாய்த வாழைகளை பார்த்து கண்ணீர் வடிக்கிறார் வாழை விவசாயி தங்கம்.
கடந்த ஆண்டு சோளம் பயிர் செய்தும் இலாபம் இல்லை இழப்பீடுக்கு பதிவு செய்தும் நிவாரணம் வழங்கப்பட வில்லை தற்போது சூறைக்காற்றில் வாழையும் சேதமடைந்து இழப்பை ஏற்படுத்தி இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.