பெரம்பலூர்-சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2021-09-14 16:48 GMT

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டம்,பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  சாலையில் எவ்வாறு பயணம் செய்வது என்பது  குறித்தும், சாலை விதிகள் பற்றியும் விரிவாக அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்துரைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரும்பாவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத் கண்ணன், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News