பெரம்பலூரில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் பேரனை தாக்கி கொள்ளை

பெரம்பலூரில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் பேரனை தாக்கி பணம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-09 09:31 GMT

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மார்ச் 8 ம் தேதி இரவு அனைவரும் படுத்து தூங்கி உள்ளனர்.

நள்ளிரவு அவர்களது பேரன்  அக்ஷய் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தபோது வீட்டில் மர்ம நபர் ஒருவர்  பீரோவில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு இருப்பது தெரிந்து சத்தம் போட்டுள்ளார். அதனையறிந்த திருடன் அக்ஷய்யை கத்தியால் கீறி விட்டு பணத்துடன் மாடிப்படி வழியாக தப்பி ஓடியுள்ளான். இதுகுறித்து சீனிவாசனின் மகன் ராஜா அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு திருடன் குறித்த தகவலை சேகரித்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்து நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபரை தாக்கிய விட்டு பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News