பெரம்பலூர்: மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Update: 2021-11-10 15:16 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர்  பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் மது விற்பது, காய்ச்சுவது, ஊரல் போடுவது போன்ற குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அது குறித்த தகவலை 10581 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்கலாம் இரகசியம் காக்கப்படும் என்று கூறியும், பொது மக்களிடம் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Tags:    

Similar News