பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு
பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும்,முன்னாள் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி..ராமச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,நகர செயலாளர் ராஜ பூபதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.