குன்னம் அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அ.தி.மு.க. உதவி

குன்னம் அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதவி வழங்கினார்.

Update: 2021-09-15 13:39 GMT

குன்னம் அருகே தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உதவி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சித்தளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ராமசாமி.இவரது  வீடு  யாரும்  இல்லாத நேத்தில் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து  வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அனைத்தனர்

ஆனாலும் இந்த தீ விபத்தில்  ராமசாமி வீட்டில் இருந்த இரும்பு கட்டில், பீரோ, சைக்கள். நெல் முட்டை- 2, மிளகாய் மூட்டை .2 போன்ற அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் நேரில் சென்று தீயில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து  ஆறுதல் கூறினார். பின்னர்  தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, துணிகளை வழங்கினார்.,

அப்போது அவருடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்க. பாலமுருகன், , சித்தளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன்.சித்தளி தலைவர் ராஜா , முன்னாள் கவுசிலர்கள், செங்குட்டுவன், சுப்பிரமணி. ஜெ. பேரவை துணை செயலாளர் சித்தளி கணேசன் கிளை செயலாளர் நல்லுசாமி சித்தளி பிரபு,உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர்.

Tags:    

Similar News