இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர அமைப்பு ஓட்டம் செப் 18ம் தேதி : கலெக்டர் அழைப்பு

பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டம் நிகழ்ச்சி செப். 18ம் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-08-27 15:06 GMT

பைல் படம்

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுதுதறை இணைந்து இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom Run 2.0) என்ற நிகழ்வை 13.08.2021 முதல் 02.10.2021 வரை நடைபெற்றுவருகின்றது.

இந்நிகழ்வானது வயது வித்தியாசமின்றி அனைத்து வயதுடைய பங்கேற்பாளர்களும் பங்குபெறும் வகையில் 18.09.2021 அன்று காலை 7.00 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் உள்ள பூங்காவில் இருந்து தொடங்கவுள்ளது.

சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்மூலம் அனைத்து மக்களும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம்.

மேலும் சமூக இடைவெளியினை பின்பற்றும்போதும் உடற்பகுதியின் அவசித்தேவையினை உணர்ந்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இயலும்.

சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும் உடல் தகுதியினை மேம்படுத்தவும், உடற்பயிற்சியினை பிரபலப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றவும் இயலும்.

இதுகுறித்த மேலும், விவரங்களுக்கு நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலரை  7736811030 என்ற கைபேசி எண்ணிலும்,

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர்  ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தார்.

Tags:    

Similar News