பெரம்பலூர்: கண் அறுவை சிகிச்சை முகாமிற்கு 50 பேர் அனுப்பி வைப்பு

பெரம்பலூரில் இருந்து மதுரைக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக 50 பேர் பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2021-10-13 12:47 GMT

கண்அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரம்பலூரி்ல் இருந்து பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் கடந்த  பத்தாம் தேதி செட்டிகுளம் லயன்ஸ் சங்கம்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்  மாவட்டம் முழுவதும்  இருந்து 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதனிடையே அறுவை சிகிச்சை செய்வதற்காக 50 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.அப்போது செட்டிகுளம் லயன் கிளப் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News