பெரம்பலூர் அருகே 50 சவரன் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் 50 சவரன் நகை, மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் கொள்ளை.

Update: 2021-03-10 02:30 GMT

பெரம்பலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 50 பவுன் நகை மற்றும் ரூ. 90ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் உரிமையாளர்கள் வீட்டில் இருக்கும் போதே நள்ளிரவில் வீடு புகுந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான 50 சவரன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

நெற்குணம் கிராமத்தில் பசும்பலூர் சாலையில் வசிக்கும் வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தீபா குழந்தைகளுடன் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று தீபா அவரது குழைந்தைகளுடன் வீ ட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அவர்களது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News