2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திட கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூரில் வாக்காளர்கள் 100சதவீதம் வாக்குப்பதிவு செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் தலைமையிலான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் 600 க்கும் அதிகமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி அணிவகுத்தனர்.பின்னர் பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள தாலுக்கா அலுவலகம் வரை நடைபெற்றது.